• Mon. Dec 8th, 2025

24×7 Live News

Apdin News

வந்தே மாதரம்: 1875ம் ஆண்டு எழுதப்பட்ட பாடல் தொடர்பாக இப்போது விவாதம் ஏன்?

Byadmin

Dec 8, 2025


வந்தே மாதரம் பாடல் தொடர்பாக பாஜக - எதிர்க்கட்சிகள் இடையே விவாதம் எழுவது ஏன்?

பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டையொட்டி, மக்களவையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோதி விவாதத்தை தொடங்கி வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்கிழமை மாநிலங்களவையிலும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வந்தே மாதரம் பாடல் 50 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, இந்திய நாடு அடிமையாக வாழ கட்டாயப்படுத்தப்பட்டது. 100 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, நாடு அவசர நிலை எனும் சங்கிலியால் கட்டுப்பட்டிருந்தது.” என்றார் பிரதமர் மோதி

மேலும் அவர் கூறுகையில், “வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு, அதன் புகழை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக உள்ளது” என்றார்.

“1857 சுதந்திரப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் பேரரசு பீதியில் இருந்த சமயத்தில் இந்த பாடல் எழுதப்பட்டது. இந்தியா மீது பலவித அழுத்தங்கள் இருந்தன, பலவித கொடுமைகள் நிகழ்ந்தன,” என்றார்.

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ‘வந்தே மாதரம்’ தொடர்பாக சச்சரவு தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே விவாதம் நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளது.

By admin