• Thu. Oct 24th, 2024

24×7 Live News

Apdin News

வயநாடு நிலச்சரிவு – குடும்பத்தையே இழந்த இளம்பெண் ஸ்ருதிக்கு மீதமுள்ள நம்பிக்கை என்ன?

Byadmin

Oct 23, 2024


வயநாடு நிலச்சரிவு - ஸ்ருதி
படக்குறிப்பு, ஸ்ருதி

‘‘புதிதாகக் கிடைத்த உறவாவது என்னோடு தொடரும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது’’ மிகவும் மெல்லிய குரலில் பேசினார் ஸ்ருதி.

ஸ்ருதி, வயநாடு நிலச்சரிவில் தன் தாய், தந்தை, தங்கை ஆகியோரைப் பறி கொடுத்த 24 வயது இளம் பெண். வயநாடு மாவட்டம் சூரல்மலையைச் சேர்ந்த அவர், கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பினார்.

ஸ்ருதியின் தாய் சபிதா, தந்தை சிவண்ணா, தங்கை ஸ்ரேயா ஆகியோரைத் தவிர்த்து, பெரியப்பா, பெரியம்மா, அவர்களின் பேரன்கள் இருவர், சித்தப்பா, சித்தி என அவரின் குடும்பத்தில் மட்டும் 9 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர்.

இத்தனை துயரத்துக்குப் பின்னும் ஸ்ருதி, தன் வாழ்க்கையைத் தொடர்வதற்கு ஒரு பற்றுக்கொடியாய் இருந்தவர் ஜென்சன், ஸ்ருதியின் காதலன்.

By admin