கடந்த ஜூலை மாத இறுதியில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, அதில் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை கிராமங்களை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், இரு கிராமங்களுக்கும் இணைப்பு தடைபட்ட நிலையில், ஜிப்லைன் வாயிலாகப் பயணித்து பாதிக்கப்பட்ட பலருக்கும் முதலுதவி சிகிச்சைகளை வழங்கினார் செவிலியர் சபீனா.