• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

வரலாற்றில் 3 ஆண்டுகள் நடந்த போப் தேர்தல்: கார்டினல்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

Byadmin

May 4, 2025


பத்தாம் கிரகோரி போப் ஆண்டவராக நீண்ட காலம் பதவி வகிக்கவில்லை. ஆனால் அவரது காலம் திருச்சபைக்கு முக்கியமானதாக அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பத்தாம் கிரகோரி போப் ஆண்டவராக நீண்ட காலம் பதவி வகிக்கவில்லை. ஆனால் அவரது காலம் திருச்சபைக்கு முக்கியமானதாக அமைந்தது.

போப் பிரான்சிஸுக்கு பிறகு அடுத்த போப் ஆண்டவரைத் தேர்வு செய்யும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின் அடிப்படை விதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்ட ஒன்று.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள கார்டினல்கள், இத்தகைய முக்கியமான முடிவை எடுக்க தங்களை வெளி உலகிடம் இருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதியை ‘போப் பத்தாம் கிரகோரி’ நிறுவினார்.

காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவர் நிறுவிய விதிகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

பத்தாம் கிரிகோரி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் ஒரு பாதிரியாராகக்கூட இல்லை என்றாலும், அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே (1271-1276) நீடித்தது என்றாலும், வரலாற்றில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய போப்களில் ஒருவராக அவர் மாறினார்.

By admin