• Fri. Feb 6th, 2026

24×7 Live News

Apdin News

“வரியை வசூலிக்க சித்ரவதைகள்” – கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் விவசாயிகளின் நிலை என்ன?

Byadmin

Feb 6, 2026


1862-ல் மெட்ராஸ் மாகாண ஆளுநர் சர் வில்லியம் டெனிசனால் நீலகிரி மலையில் முதல் பெருவியின் பார்க் மரங்கள் நடப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1862இல் மெட்ராஸ் மாகாண ஆளுநர் சர் வில்லியம் டெனிசனால் நீலகிரி மலையில் முதல் பெருவியின் பார்க் மரங்கள் நடப்பட்டன.

    • எழுதியவர், கா.அ.மணிக்குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

(இந்தக் கட்டுரையில் வரும் அனைத்து கருத்துகளும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல)

“பல அம்சங்களில், முகமதியர்களின் ஆட்சி நம்முடைய ஆட்சியைவிட மேலோங்கியிருந்தது; அவர்கள் தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் நிரந்தரமாக குடியேறினர்; இந்திய மக்களுடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கினர். வென்றவர்களுக்கும் வெல்லப்பட்டவர்களுக்குமான நலன்களும், உணர்வுகளும் ஒன்றாயின. இதற்கு நேர்மாறாக, நமது ஆட்சி இரக்கமற்ற, சுயநலம் கொண்ட, உணர்ச்சியற்றதாய் உள்ளது.”

– ஹென்றி கேவன்டிஷ் வில்லியம் பென்டிங்

இந்த மேற்கோள் சென்னை மாகாண ஆளுநராகவும் , இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த வில்லியம் பென்டிங் பிரபுவின் கூற்றாகும்.

ஆங்கிலேயர் ஆட்சியின் தன்மை

மகாத்மா காந்தியால் இந்திய தேசியத்தின் தந்தையாகக் கருதப்பட்ட தாதாபாய் நௌரோஜி ஆங்கிலேயர் ஆட்சியின் தன்மையை இவ்வாறு விளக்கினார்: “முந்தைய வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் படையெடுப்புகளின்போது நாட்டைச் சூறையாடிக் கொள்ளையடித்துத் திரும்பியபோது பெரும் காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும் காயங்கள் நாளடைவில் ஆறின; தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் வலிமை பெற்றது.

By admin