• Sun. Oct 12th, 2025

24×7 Live News

Apdin News

வலங்கைமானில் தீண்டாமைச் சுவரா? – பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?

Byadmin

Oct 12, 2025


சாதி, சமூகம், தீண்டாமை சுவர், பட்டியலின மக்கள், சட்டம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதை கடந்த ஓராண்டுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சுவர் வைத்து அந்த பாதையை அடைத்துள்ளார்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு நகரப் பகுதிக்குச் செல்ல அபாயகரமான சாலையில் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகப் பட்டியலின மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது பட்டியலின மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் ‘தீண்டாமை சுவர்’ என பட்டியலின மக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் பட்டா உரிமையாளரின் அனுமதி பெற்று சுவர் இடிக்கப்பட்டு பாதை அமைத்துத் தரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டாகியும் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அரசிடம் கேள்விகளை எழுப்புகின்றனர்.



By admin