நடப்பு ஆண்டில் இந்த நிதி மேலும் 5.8 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிக்கை எச்சரிக்கிறது.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் விதித்துள்ள அதிகப்படியான இறக்குமதி வரிகள், ஏழை நாடுகளின் ஏற்றுமதித் துறையைப் பெரிதும் பாதித்துள்ளன.
ஏழை நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கான வரி 9%-லிருந்து 28%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துள்ளது.
இந்தச் இக்கட்டான சூழலைச் சமாளிக்க, உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற சா்வதேச நிதி அமைப்புகளில் உடனடியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.