• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதல் – செளதி, பஹ்ரைன், அபுதாபி, கத்தாரில் என்ன நிலவரம்?

Byadmin

Mar 9, 2026


மார்ச் 1 அன்று கத்தாரில் நடந்த தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்ச் 1 அன்று கத்தாரில் நடந்த தாக்குதல்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஒரு தாக்குதலில் மிக அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக பஹ்ரைன் உள்ளது.

பஹ்ரைன் மீது நடத்தப்பட்ட ஒரு டிரோன் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 32 பேர் காயமடைந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 2 மாத குழந்தையும் அடங்கும்.

வளைகுடா முழுவதும் இதுவரை குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினர் அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகை

கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவும் புதிய தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ளன.

ஒரு முக்கிய எண்ணெய் வயலை நோக்கி இரண்டு அலைகளாக வந்த டிரோன்களை இடைமறித்து அழித்ததாக செளதி தெரிவித்துள்ளது.

By admin