• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

வளைகுடா பிராந்தியத்தில் பாகிஸ்தான் செல்வாக்கு அதிகரிக்கிறதா? அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்து

Byadmin

Aug 31, 2026


 ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா சலீம் அல்-சபா -  கவாஜா முஹம்மது ஆசிப்

பட மூலாதாரம், Kuwait Army General Staff

படக்குறிப்பு, குவைத் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா சலீம் அல்-சபா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப்

    • எழுதியவர், நஸ்ரின் ஹதூம்
    • பதவி, பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

குவைத் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா சலேம் அல்-சபா இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, ​​பாகிஸ்தானும் குவைத்தும் ஆகஸ்ட் 27, வியாழக்கிழமை கூட்டுப் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பாகிஸ்தான் தரப்புத் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டு குவைத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விரிவாக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்துக்கு 2026ஆம் ஆண்டு குவைத் ஒப்புதல் அளித்தது.

ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதையும், ராணுவத் தயார்நிலையை மேம்படுத்துவதையும் புதிய ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ராணுவப் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் எல்லை நிர்வாகம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது.

By admin