• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயமா? குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து

Byadmin

Apr 4, 2026


'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' -  குவைத்தில் நடந்த தாக்குதல் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குவைத் சிட்டி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல்

    • எழுதியவர், கேட்டி வாட்சன் & கோன்சே ஹபீபியாசாத்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வுகள் அங்குள்ள மக்களில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள் இரானின் பதிலடி தாக்குதல்களை சந்தித்து வருகின்றன.

மத்திய கிழக்கின் இந்த பகுதி மிகவும் வறண்டது. இங்கு வாழ்வதற்காக மின் நிலையங்களும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் மிக அவசியமானவை.

By admin