• Mon. Mar 17th, 2025

24×7 Live News

Apdin News

வழி தவறி வந்து கொத்தடிமையாக இருந்த அப்பாராவ் குடும்பத்துடன் சேர்ந்தார்

Byadmin

Mar 17, 2025


கொத்தடிமை , ஆந்திரா , ஒடிசா, அப்பாராவ், ஆடு மேய்த்தல், கொத்தடிமை மீட்பு, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு , சிவகங்கை, காளையார்கோயில்

பட மூலாதாரம், HANDOUT

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வழி தவறி சிவகங்கை மாவட்டத்துக்கு சென்ற அப்பாராவ், தற்போது குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார்.

சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த நெகிழ்வான தருணத்தில் அப்பாராவை அழைத்துச் செல்ல அவரது மகள் சாயம்மாள் மற்றும் மருமகன் தம்புதோரா சந்து ஆகியோர் வந்திருந்தனர்.

அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தவாறே கண்ணீர் மல்க தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார் அப்பாராவ்.

அப்பாராவின் தமிழ்நாட்டு வாழ்க்கை சுமார் 20 ஆண்டுகள் பின்னிருந்து தொடங்குகிறது. 2003-ம் ஆண்டு வாக்கில் ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு கட்டட வேலைக்காக ரயிலில் வந்த அப்பாராவ், ரயில் நிலையம் ஒன்றில் டீ குடிக்க இறங்கிய போது ரயிலை தவறவிட்டார்.

By admin