• Sat. Aug 9th, 2025

24×7 Live News

Apdin News

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? அவசியமான 5 கேள்வி-பதில்கள்

Byadmin

Aug 8, 2025


வாக்காளர்களின் எண்ணிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024ம் ஆண்டில் முதல் முறையாக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 25 சதவிகிதம் அதிகமாக இருந்தது

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களைப் போலவே, மக்களவைத் தேர்தல்களிலும் ‘வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி’ நடந்ததாக குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ‘தவறானவை’ என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், வாக்குத் திருட்டு என்று சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டுமென்றும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

முன்னதாக, பிகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையம் குறித்த கேள்விகளை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் எழுப்பியிருந்தார்.

By admin