• Tue. Apr 29th, 2025

24×7 Live News

Apdin News

வாக்குச்சாவடி முகவர் மாநாடு; கோவையில் விஜய்க்கு கூடிய கூட்டம் வாக்காக மாறுமா?

Byadmin

Apr 29, 2025


தமிழக வெற்றிக் கழகம், விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கு ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் நடந்தது.

இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் இரு நாட்களும் பங்கேற்றுப் பேசினார். அவரைப் பார்ப்பதற்காக 2 நாட்களும் சாலையெங்கும் பெருமளவு கூட்டம் குவிந்தது.

இந்த நிகழ்ச்சி தேர்தலை எதிர் கொள்ளவும், கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியாக பார்க்கப்படுவதால், இதுகுறித்து எல்லாத் தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன.

அதை 2 நாள் கருத்தரங்கு பூர்த்தி செய்ததா, கோவையில் கூடிய கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற விவாதங்கள் வலுத்து வருகின்றன.

By admin