• Tue. Dec 2nd, 2025

24×7 Live News

Apdin News

வாரியகல – ஹில்சைட்: இலங்கையில் மண் சரிவால் தனிமையில் சிக்கிய முழு கிராமம் – பிபிசி கள ஆய்வு

Byadmin

Dec 2, 2025


மண் சரிவால் தனிமையில் சிக்கிய 200 குடும்பங்கள் – கிராமத்தில் நிலைமை என்ன? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, புஷ்பகலா

”கொரோனா காலத்தில் கூட நாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், இன்று தனிமையாகியுள்ளோம். மனவேதனையில் கதைத்துக்கொண்டிருக்கின்றோம்.” என கண்டியின் வாரியகல – ஹில்சைட் பகுதியைச் சேர்ந்த சிவா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் திட்வா புயலின் தாக்கம் அதிதீவிர நிலையில் இருந்த போது, நில்லம்பே பகுதியிலேயே அதிகளவான மழை பதிவாகியிருந்தது.

431 மில்லிமீட்டர் மழை பதிவான நில்லம்பே பகுதிக்கு சொந்தமான பிரதேசமே வாரியகல – ஹில்சைட்.

இங்கு சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், இன்று வாரியகல – ஹில்சைட் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தனிமையாகியுள்ளதை போன்றதொரு எண்ணத்தை கொண்டுள்ளனர்.

By admin