• Wed. Oct 29th, 2025

24×7 Live News

Apdin News

வாலி எழுதிய சிறந்த 10 தமிழ் திரைப்பட பாடல்கள் எவை? பா.விஜய் பேட்டி

Byadmin

Oct 29, 2025


கவிஞர் வாலி - 10 சிறந்த பாடல்கள்

பட மூலாதாரம், @sgsiyer1970/x

கவிஞர் வாலியின் பிறந்த நாள் இன்று. வாலியால் தன்னுடைய கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட கவிஞர் பா.விஜயிடம், வாலி எழுத்தில் உங்களுக்குப் பிடித்தப் பத்துப் பாடல்களைப் பற்றிப் பகிருங்கள் என்று பிபிசி தமிழ் சார்பாக அணுகினோம்.

“வாலி ஒரு மகாகவி. உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் வரலாற்றில், ஒரே மொழியில், 15,000 பாடல்களை எழுதிய ஒரே பாடலாசிரியர் வாலி அவர்கள் மட்டுமே. அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாதனை இது. நான் அவருடன் பழகிய, பேசிய, அருகில் இருந்து கற்ற ஏராளமான நினைவுகள் என்றும் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். அவர் எழுதியதில் எனக்குப் பிடித்த பாடல்கள் என்றால், அவர் எழுதிய எல்லாமே மிகச்சிறந்த பாடல்கள் தான். தற்போது என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சில பாடல்களைப் பற்றி நான் பகிர்கிறேன்.” என்று கூறி சில பாடல்களை பா.விஜய் பகிர்ந்தார். இனி அவரது வார்த்தைகளில்…

கவிஞர் வாலி - 10 சிறந்த பாடல்கள்
படக்குறிப்பு, கவிஞர் பா.விஜய்

1. ரோஜா ரோஜா… (காதலர் தினம்)

அந்த காலகட்டத்தில் பாண்டவர் பூமி, அவதார புருஷன் போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வாலி எழுதிக் கொண்டிருந்தார். அந்த இலக்கிய நடையை திரையிசைப் பாடல் ஒன்றில் பாய்ச்சியிருந்தார்.

‘இளையவளின் இடையொரு நூலகம், படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்’ போன்ற வரிகளில் இருக்கும் இலக்கிய நயத்தை நான் வியந்திருக்கிறேன். இலக்கியத் தமிழ் மின்னி மிளிர்ந்து, பொங்கி வழியும். அவ்வளவு இலக்கியத்துவமாக வாலி அதற்கு முன் எழுதவில்லை. அதனாலயே எனக்கு மிக மிகப் பிடித்த, மனதுக்கு இணக்கமான பாடல் இது.



By admin