• Sat. Oct 19th, 2024

24×7 Live News

Apdin News

விகாஷ் யாதவ்: யார் இவர்? அமெரிக்காவில் சீக்கியர் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

Byadmin

Oct 19, 2024


அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக நியூயார்க் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பட மூலாதாரம், US Justice Department

படக்குறிப்பு, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள விகாஷ் யாதவின் புகைப்படம்

காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்ல முயன்றதற்காக முன்னாள் இந்திய அரசு அதிகாரி விகாஷ் யாதவ் மீது “கொலை செய்ய கூலிப்படையை ஏவுதல் மற்றும் பணமோசடி” ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்கின் தெற்கு மாகாணத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

விகாஷ் யாதவ் மீதான குற்றப்பத்திரிகை, ஒரு படுகொலை முயற்சியில் இந்திய அரசை நேரடியாகச் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.

By admin