• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

விஜயின் கரூர் வருகை: அரசுப் பணி வழங்கப்பட்ட 31 பேர் யார்? என்னென்ன பணிகள் வழங்கப்பட்டன?

Byadmin

Jul 10, 2026


விஜய் கரூர் பயணம், அரசுப் பணி வழங்க தடையில்லை

பட மூலாதாரம், TVK

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் சென்றுள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் கரூர் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், “கரூரில் அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வர வேண்டாம் என காவல்துறை சொல்லியிருக்கலாம் அல்லவா? அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்” என்று கூறினார்.

“என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. கரூரில் தவெக சார்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

புதிய தொழில்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.

By admin