Live Updates
இன்று (12) அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான AI 171 விமானத்தில் பயணித்த இருவர் உயிர்தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விருவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவரவில்லை.
ஒருவர் விமானத்தினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கண் மற்றும் கைகளில் லேசான காயத்துடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற குறித்த பயணி, கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை அகமதாபாத் பொலிஸார் வழங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தில் பயணித்தவர்கள், குடியிருப்பு மற்றும் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்தவர்கள் என விபத்து நடந்த இடத்தில் இதுவரை சுமார் 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விமானச் சிதைவுகளை அகற்றி, காயமுற்றோருக்குச் சிகிச்சை அளிக்க இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 130 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடை LIVE update செய்திகள் : இந்தியாவில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட விமானம் 242 பேருடன் விபத்துக்குள்ளானது
விபத்துக்குள்ளான குறித்த விமானம், இலண்டன் – கேட்விக் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்தது. சுமார் 9 மணி நேரத்துக்கும் மேற்பட்டதான பயண தூரம் என்பதால் அதிகளவிலான எரிபொருள் விமானத்தில் இருந்தமையும் இந்த விபத்தை பாரதூரமாக்கியுள்ளது.