• Fri. Jun 27th, 2025

24×7 Live News

Apdin News

விமான விபத்தின் விசாரணையில் ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

Byadmin

Jun 27, 2025


இம்மாதம் 12ஆம் திகதியன்று, அகமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா போயிங் 787-8 விமான விபத்து விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா நிராகரித்துள்ளது.

உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில், இங்கிலாந்து உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 260 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த வார ஆரம்பத்தில் ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) இந்த விபத்து விசாரணையில் உதவுவதற்காக தனது ஒரு புலனாய்வாளரை இந்தியாவிற்கு அனுப்ப முன்வந்தது.

வழக்கமாக, ஐ.நா.விடம் உதவி கோரப்பட்ட பிறகே இதுபோன்ற உதவிகளை வழங்கும். ஆனால், இந்த முறை, ஐ.நா. தானாக முன்வந்து உதவியை வழங்கியது.

அந்த புலனாய்வாளருக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்க ICAO கோரியிருந்த போதும், இந்திய அதிகாரிகள் அதனை மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

By admin