• Mon. Jun 30th, 2025

24×7 Live News

Apdin News

வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில் | Corporation says Vyasarpadi Ganesapuram flyover work 40% complete

Byadmin

Jun 30, 2025


சென்னை: வட சென்னை வியாசர்​பாடி பகு​தி​யில் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந் திருப்பதாக மாநக​ராட்சி நிர்​வாகம் பதில் அளித்​துள்​ளது. வியாசர்​பாடி கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி நீண்ட கால​மாக முடிக்​கப்​ப​டா​மல் உள்​ளது.

இதனால் வாகன ஓட்​டிகள் சிரமத்​துக்​குள்​ளாகிறார்​கள். எனவே பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும் என்று வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம், சென்னை மாநக​ராட்சி மேயரிடம் அண்​மை​யில் மனு அளித்​திருந்​தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம், டி.கே.சண்​முகத்​துக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கணேசபுரம் மேம்​பாலத்​தின் தெற்கு பகு​தி​யில் தூண்​கள் அமைக்​கும் பணி முடிவுற்​று. தற்​போது வடக்கு பகு​தி​யில் ஆழ்​துளைக் கடைக்​கால்​கள் அமைக்​கும் பணி, சென்னை குடிநீர் வாரி​யத்​தின் குடிநீர் மற்​றும் கழி​வுநீர்க் குழாய்​களை மாற்​றியமைக்​கும் பணி மற்​றும் நிலம் கையகப்​படுத்​தும் பணி ஆகியவை நடை​பெற்று வரு​கின்​றன.

தற்​போது வரை 40 சதவீதம் பணி​கள் முடிவடைந்​துள்​ளன. வடக்கு பகு​தி​யில் நில எடுப்​புக்கு பின்​னரே அந்​நிலத்​தில், சென்னை குடிநீர் வாரி​யத்​தின் குடிநீர் மற்​றும் கழி​வுநீர் குழாய்​கள் மாற்​றியமைக்​கப்பட வேண்​டும். எனவே, நில எடுப்பு செய்​யப்​பட்ட நாளி​லிருந்து 6 மாத காலத்​துக்​குள் இம்​மேம்​பாலப் பணி முடிக்​கப்​படும்.

இவ்​வாறு பதில் கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது. நில எடுப்பு பணி​களை எவ்​வளவு துரிதப்​படுத்த முடி​யுமோ, அந்த அளவுக்கு துரிதப்​படுத்தி மேம்​பாலப் பணி​களை வேக​மாக முடிக்க வேண்​டும் என்று வடசென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்​பு வலி​யுறுத்​தியுள்​ளது.



By admin