• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

விர்ஜினியா மெக்கல்லா: பெற்றோரை கொலை செய்து சடலங்களுடன் 4 ஆண்டுகள் வாழ்ந்தவர் பிடிபட்டது எப்படி?

Byadmin

Oct 18, 2024


பெற்றோரை கொலை செய்து சடலங்களுடன் 4 ஆண்டுகள் வாழ்ந்த பெண் - பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், Essex Police

படக்குறிப்பு, பெற்றோரை கொலை செய்தபின் அவர்களின் ஓய்வூதியத்தை விர்ஜினியா பயன்படுத்தி வந்துள்ளார்

[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]

காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார்.

“உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவிட்டீர்கள்,” என தனக்குக் கைவிலங்கு மாட்டிய அதிகாரிகளிடம் அவர் அமைதியாகக் கூறினார்.

ஜான் (John) மற்றும் லூயிஸ் மெக்கல்லா (Lois McCullough) இருவரும் கடலோரத்தில் வசித்து வருவதாக அவர்களின் அண்டை வீட்டார் நினைத்திருந்தனர். ஆனால், உண்மையில் இருவரும் தன் மகளால் இரக்கமற்ற வகையில் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.

By admin