• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

விஷ டார்ட் தவளைகளை பல நாள் பட்டினிக்கு பிறகு உண்ட பாம்புகள் மரணத்தை வென்றது எப்படி?

Byadmin

Nov 22, 2025


உயிரினங்கள், அறிவியல், பரிணாமம், உயிரியல், கொடிய நச்சு

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், கேத்தரினா ஜிம்மர்
    • பதவி,

கொலம்பியாவில் உள்ள அமேசான் காடுகளில் பிடிக்கப்பட்ட அந்தப் பத்து பாம்புகள், பல நாட்கள் உணவின்றி இருந்தன. பின்னர், அவற்றுக்கு மிகவும் ஆபத்தான உணவொன்று வழங்கப்பட்டது. அந்த உணவு, அதிக நச்சுத் தன்மை கொண்ட டார்ட் தவளைகள்.

இந்தத் தவளைகளின் தோலில் ஹிஸ்ட்ரியோனிகோ டாக்சின்கள், பியூமிலியோ டாக்சின்கள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த வேதிமங்கள் உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டைச் சீர்குலைக்கக் கூடியவை.

பத்தில் ஆறு ‘ராயல் கிரவுண்ட் பாம்புகள்’ அந்த ஆபத்தான உணவை உண்பதைவிடப் பட்டினியாகவே இருக்க விரும்பின. மீதமுள்ள நான்கு பாம்புகள் துணிச்சலாக அந்தத் தவளைகளை வேட்டையாடின. ஆனால், இரையை விழுங்குவதற்கு முன், அவை தவளைகளைத் தரையில் வைத்துத் தேய்த்தன.

“சில பறவைகள் தங்கள் இரையின் உடல் மீதுள்ள நச்சு வேதிமங்களை நீக்குவதற்காகத் தரையில் தேய்ப்பதைப் போலவே இதுவும் இருந்தது,” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் வலேரியா ராமிரெஸ் காஸ்டனெடா. இவரும் இவரது குழுவினருமே இந்தப் பரிசோதனையை மேற்கொண்டனர்.

அந்த நான்கு பாம்புகளில் மூன்று பாம்புகளுக்கு அந்த உணவால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இரையில் மீதமிருந்த நச்சு வேதிமத்தைக் கையாளும் திறன் அந்தப் பாம்புகளின் உடலுக்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

By admin