• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

விஸ்வாஸ்குமார் ரமேஷ்: ஏர் இந்தியா விபத்தில் தப்பிய ஒரே நபர் எப்படி இருக்கிறார்? அவர் கூறுவது என்ன?

Byadmin

Nov 4, 2025


'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஆனால்..!' ஏர் இந்தியா விபத்தில் தப்பியர் கூறுவது என்ன?

241 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ்குமார் ரமேஷ். “அதிர்ஷ்டசாலியாக” உணர்வதாக ரமேஷ் கூறும் அதே சமயம், உடல் மற்றும் மன ரீதியாக பெரும் துயரத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற போது விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ரமேஷ் நடந்து வந்த காட்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

தான் தப்பித்தது ஓர் “அதிசயம்” என்று ரமேஷ் கூறுகிறார்.

ஜூன் மாதம் நடந்த அந்த விமான விபத்தில், அதே விமானத்தில் சில இருக்கைகள் தொலைவில் இருந்த தனது தம்பி அஜய் உயிரிழந்ததால் அனைத்தையும் இழந்துவிட்டதாக உணர்வதாக ரமேஷ் வருந்துகிறார்.

பிரிட்டனில் தனது வீட்டிற்கு திரும்பிய பிறகு, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு காரணமாக ரமேஷ் மிகவும் போராடி வருவதாகவும், அவரது மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் அவரால் இயல்பாக பேச முடியவில்லை என்றும் அவரது ஆலோசகர்கள் தெரிவித்தனர்.



By admin