• Tue. Mar 4th, 2025

24×7 Live News

Apdin News

வீர்ஜி வோரா: பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் கடன் கொடுத்த குஜராத்தி பணக்காரர்

Byadmin

Mar 2, 2025


வீர்ஜி வோரா - குஜராத்தி வணிகனின் கதை

பட மூலாதாரம், Getty Images

மேற்கு இந்தியாவில் முகலாய ஆட்சியிலிருந்து சுதந்திரமாக மராட்டிய அரசாங்கத்தை நிறுவிய சிவாஜி, 1664 இல் குஜராத்தில் உள்ள சூரத் மீது படையெடுத்து, அங்கு வணிகரும் கடன் கொடுப்பவருமான விர்ஜி வோராவின் 50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் அல்லது 6,50,000 வெள்ளி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கொள்ளையடித்தார்.

பொருளாதார நிபுணர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் பிரேம் சங்கர் ஜாவின் கூற்றுப்படி, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் சூரத்தைச் சேர்ந்த விர்ஜி வோரா, ஆமதாபாத்தின் சாந்திதாஸ் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த ஜகத்சேத் குடும்பம் போன்ற வணிகர்களும் கடன்கொடுப்பவர்களும் அளவுக்கதிகமான செல்வம் சேர்த்திருந்தனர்.

மேலும், அவர்கள் இத்தாலிய நகரமான வெனிஸின் வணிகர்களையும் விஞ்சி, செல்வத்தை குவிந்திருந்தனர் என்றும் அறியப்படுகின்றது.

பிரேம் சங்கர் ஜா தனது ‘Crouching Dragon, Hidden Tiger’ என்ற புத்தகத்தில் “அவர்கள் தங்களை ஆண்ட மன்னர்கள் மற்றும் நவாப்களை விட பணக்காரர்களாக மாறினர்” என்று எழுதியுள்ளார்.

By admin