• Thu. Jun 26th, 2025

24×7 Live News

Apdin News

வெடிகுண்டு மிரட்டலால் குஜராத்தை கலங்கடித்த சென்னை பெண்

Byadmin

Jun 26, 2025


இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், நரேந்திர மோதி ஸ்டேடியம், குஜராத், வெடிகுண்டு மிரட்டல்கள்,

பட மூலாதாரம், Ahmedabad Police

படக்குறிப்பு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த ரெனே ஜோஷில்டா கைது செய்யப்பட்ட காட்சி

போலி மின்னஞ்சல்கள் மூலம் நாடு முழுவதும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளரை ஆமதாபாத் போலீஸ் கைது செய்துள்ளது.

தனது காதலனை பழிவாங்குவதற்காக டார்க் வெப் மூலம் அப்பெண் போலி இமெயில்களை அனுப்பியதாக, ஆமதாபாத் குற்றப்பிரிவு இணை ஆணையர் கூறியுள்ளார். யார் இந்த பெண் பொறியாளர்? ஒரு சிறிய தவறு மூலம் அவர் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஜெனீவா லிபரல் பள்ளிக்கு கடந்த ஜூன் 3 அன்று இமெயில் ஒன்று வந்துள்ளது. பள்ளி வளாகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் குறிப்பிட்டு, ‘காவல்துறையினர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இமெயில் மூலம் மிரட்டல்

தொடர்ந்து, பள்ளியில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. அடுத்து வந்த நாட்களிலும் பள்ளிக்கு மிரட்டல் இமெயில்கள் வரத் தொடங்கியுள்ளன.

By admin