வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் இங்கிலாந்து எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் பிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து, தான் இன்னும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் பேசவில்லை என்றும், இது மிக வேகமாக மாறிவரும் சூழல் என்பதால் அனைத்து உண்மைகளையும் முதலில் கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அதற்கு முன்னதாகத் தான் உண்மைகளை உறுதிப்படுத்தவும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் பிற நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்கவும் விரும்புவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி : வெனிசுலாவில் அவசரநிலை: தொடர் தாக்குதல்களுக்குப் பின் ஜனாதிபதி பிடிபட்டார்; டிரம்ப் அறிவிப்பு
மேலும், இங்கிலாந்து எப்போதும் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுவதையே விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது வெனிசுலாவில் உள்ள சுமார் 500 இங்கிலாந்து குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது குறித்துத் தூதரகத்துடன் இணைந்து துரிதமாகச் செயல்பட்டு வருவதாகவும் இங்கிலாந்து பிரதமர் உறுதியளித்தார்.
The post வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையில் இங்கிலாந்திற்கு தொடர்பில்லை: பிரதமர் திட்டவட்டம் appeared first on Vanakkam London.