• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

வெனிசுலாவை ராணுவம் மூலம் அச்சுறுத்தும் அமெரிக்கா-டிரம்பின் நோக்கம் என்ன?

Byadmin

Oct 25, 2025


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெனிசுலா அதிபர்

அமெரிக்க ராணுவம் கடந்த இரண்டு மாதங்களாக கரீபியன் கடலில் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், கடற்படையினர், ஆளில்லா விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை குவித்து வருகிறது. இது பல தசாப்தங்களாக அங்கு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ராணுவக் குவிப்பாகும்.

பி-52 ரக நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் வெனிசுலா கடற்கரையில் “குண்டுவீச்சுத் தாக்குதல் செயல்விளக்கங்களை” நடத்தியுள்ளன. டிரம்ப் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வை வெனிசுலாவிற்கு அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளார், மேலும் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல் (aircraft carrier) அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

வெனிசுலாவில் இருந்து “போதைப்பொருள்” மற்றும் “போதைப்பொருள் பயங்கரவாதிகளை” ஏற்றிச் செல்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டும் சிறிய கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லது விவரங்களையும் அது வழங்கவில்லை.

இந்தத் தாக்குதல்கள் அப்பகுதியில் கண்டனங்களை ஈர்த்துள்ளன, மேலும் நிபுணர்கள் அதன் சட்டபூர்வமான தன்மையையும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராக அமெரிக்காவால் கூறப்பட்டாலும், இதன் அறிகுறிகள் யாவும், இது உண்மையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்ற முயலும் ஒரு மிரட்டல் நடவடிக்கை என்பதையே சுட்டிக் காட்டுகின்றன.



By admin