• Fri. Dec 12th, 2025

24×7 Live News

Apdin News

வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் டேங்கரை கைப்பற்றிய அமெரிக்கா

Byadmin

Dec 12, 2025


வெனிசுவேலா, எண்ணெய் கப்பல்

பட மூலாதாரம், US Government

    • எழுதியவர், கெய்லா எப்ஸ்டீன்

அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோ அரசுக்கு எதிராக அமெரிக்கா செலுத்தும் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

“நாங்கள் இப்போதுதான் வெனிசுவேலா கடற்கரையில் ஒரு டேங்கர் கப்பலைக் கைப்பற்றியுள்ளோம். இது ஒரு பெரிய டேங்கர், மிகப் மிகப் பெரியது, உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப் பெரியது,” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட கப்பலின் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க அட்டர்னி ஜெனரல், இந்தக் கப்பல், “வெனிசுவேலா மற்றும் இரானிலிருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு கச்சா எண்ணெய் டேங்கர்.” என்று விவரித்தார்.

இந்த நடவடிக்கையை உடனடியாக கண்டித்த வெனிசுவேலா, இதை “சர்வதேச கடற்கொள்ளை” என்று கூறியது. முன்னதாக, அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் “எண்ணெய் காலனியாக” மாறாது என்று அறிவித்திருந்தார்.

வெனிசுவேலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. கூடவே, அதிபர் மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளைச் சமீப மாதங்களாகத் தீவிரப்படுத்தியுள்ளது.

By admin