• Wed. Jan 7th, 2026

24×7 Live News

Apdin News

வெனிசுவேலா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு விமர்சிக்கப்படுவது ஏன்?

Byadmin

Jan 5, 2026


நரேந்திர மோதி

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, வெனிசுவேலா விவகாரம் குறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அது மிகவும் எச்சரிக்கையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒர் அசாத்திய நடவடிக்கையாக, அமெரிக்க சிறப்புப் படைகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்தன.

அவர் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அங்கு விசாரிக்கப்படுவார்.

இந்தக் குற்றச்சாட்டை மதுரோ பலமுறை மறுத்து, நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

வெனிசுவேலாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “தன்னிச்சையானது மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளன.

அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாகவும், தென் அமெரிக்க பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியுள்ள சீனா, மதுரோவை உடனடியாக விடுவிக்க கோரியுள்ளது.

By admin