• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Minister Sekar Babu says 28 more Swami idols smuggled abroad have been identified

Byadmin

Oct 4, 2025


சென்னை: தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார்.

கோயில்​கள் சார்​பில் நடத்​தப்​படும் அர்ச்​சகர் பயிற்​சிப் பள்​ளி​களில் ஓராண்டு பயிற்சி முடித்த 2 பெண்​கள் உட்பட 89 மாணவர்​கள், மூன்​றாண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்​கள், தவில் மற்​றும் நாதஸ்வர பயிற்​சிப் பள்​ளி​யில் மூன்​றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்​கள் என 108 பேருக்கு அதற்​கான சான்​றிதழை அறநிலை​யத் துறை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு நேற்று வழங்​கி​னார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: 2021-ம் ஆண்​டிலிருந்து இது​வரை பயிற்​சிப் பள்​ளி​களில் பயின்ற 213 பேருக்கு சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளது. திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு இது​வரை 43 ஓது​வார்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் பெண் ஓது​வார்​கள் மட்​டும் 12 பேர். திமுக ஆட்​சி​யில் இது​வரை 3,707 கோயில்​களுக்கு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது.

கோயில்​களில் உள்ள சிலைகளை பாது​காப்​ப​தற்​காக, ஸ்ட்​ராங்ரூம்​கள் எனப்​படும் பாது​காப்பு அறை​கள், இந்த ஆட்சி பொறுப்​பேற்ற பிறகு 1,800 வரை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28-க்​கும் மேற்​பட்ட சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. கடந்த காலத்​தில் நடந்த சிலை திருட்​டு​களில் 10 சதவீதம் கூட இப்​போது நடை​பெற​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.



By admin