• Tue. Oct 14th, 2025

24×7 Live News

Apdin News

வெள்ளி விலை இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அதிகரித்தது ஏன்? 5 கேள்வி – பதில்கள்

Byadmin

Oct 14, 2025


அதிகரிக்கும் வெள்ளி விலை - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அண்மைக் காலமாக புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று(14-10-2025) காலை ஒரு கிராம் வெள்ளியின் விலை 9 ரூபாய் உயர்ந்து 206 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,06,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 20 நாட்களில் ஒரு கிலோ வெள்ளியின் விலை சுமார் ரூ.62 ஆயிரம் அதிகரித்துள்ளது.

வரும் நாட்களிலும் வெள்ளியின் விலை அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். தொழில்துறை தேவை, விழாக்காலம், சர்வதேச சந்தை நிலவரம் என பல காரணங்கள் வெள்ளி விலை உயர்வுக்கு முன்வைக்கப்படுகின்றன.

வெள்ளியில் பலரும் முதலீடு செய்வதால் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளிக்கட்டிகள் முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும் தற்போதைய சூழலில் வெள்ளிக் கட்டிகளை முன்பதிவு செய்தே வாங்க முடிவதாகவும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

வெள்ளி கட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதா?

தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “நிச்சயமாக வெள்ளியின் தேவை முன்பைவிட இப்போது அதிகரித்துள்ளது. இந்தளவுக்கு முன்பு தேவை இருந்ததில்லை. முன்பு பணம் செலுத்தியதுமே வெள்ளி கட்டிகள் கிடைத்துவிடும்.



By admin