• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

வேகன் டிராஜடி: காற்றுப்புகாத சரக்கு ரயிலில் அடைத்துக் கொல்லப்பட்ட 70 பேர் – இந்திய விடுதலைப் போரின் மறக்கப்பட்ட வரலாறு

Byadmin

Oct 2, 2025


கோவை, கேரளா, போத்தனூர், மலப்புரம், மலபார், சுதந்திர இந்திய வரலாறு, வேகன் டிராஜடி, பாரவண்டி படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேரளாவின் திரூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவரங்கம்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

இந்திய விடுதலைப்போரில் ‘தெற்கின் ஜாலியன் வாலாபாக்’ என்று குறிப்பிடப்படும், வேகன் டிராஜடி நிகழ்வுக்கும் தமிழ்நாட்டின் கோவைக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று தமிழ்நாடு, கேரளா என பிரிந்திருந்தாலும், அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் ஒரே பகுதியாக இருந்த மலபார் பகுதியில், மாப்ளா கலவரம் நிகழ்ந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் கலவரம் என சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும் இந்த வன்முறையில், குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கானோர் சரக்கு ரயிலில் அடைக்கப்பட்டு, கோவை அனுப்பப்பட்டனர். ஆனால் காற்று புகாத அந்த பெட்டிகளில் சிக்கி 70 பேர் உயிரிழந்த சம்பவம்தான் வேகன் டிராஜடி என ஆங்கிலத்திலும், பாரவண்டி படுகொலைகள் என மலையாளத்திலும் குறிப்பிடப்படுகிறது.

‘சரக்கு வண்டியில் காற்றுப்புகாத பெட்டிக்குள் நுாற்றுக்கும் மேற்பட்டோரை தலையணையில் பருத்தியை நிரப்புவது போல, துப்பாக்கி முனையில் எங்களை உள்ளே தள்ளி கதவுகளை பூட்டினர். உள்ளே நிற்கவே இடமில்லை. தாகத்தில் நாங்கள் கத்தினோம். சிலர் சிறுநீரை குடித்தனர். சகோதரத்துவத்தை மறந்து, அறிவை இழந்து, அடுத்தவரைத் தாக்கினர். ஆணி தளர்ந்த ஒரு சிறு ஓட்டையில் வந்த காற்றில் சிலர் தப்பினர். நாங்கள் மயங்கி விழுந்து, மீண்டும் விழித்தபோது நான்கைந்து பேர் எங்கள் மீது சடலமாகக் கிடந்தனர்.”

By admin