• Tue. Aug 26th, 2025

24×7 Live News

Apdin News

வேற்றுக்கிரகவாசி இருந்தாலும் மனிதனை சந்திக்க வாய்ப்பு மிக குறைவு என விஞ்ஞானிகள் கருதுவது ஏன்?

Byadmin

Aug 26, 2025


ஏலியன்கள், பூமி, மனிதர்கள், விண்வெளி ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

நள்ளிரவில் ஆங்காங்கே பிரகாசமாக நட்சத்திர கூட்டங்கள் நிறைந்த வானத்தை நோக்கிப் பார்த்து, இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்தில் நாம் உண்மையில் தனியாகவா இருக்கிறோம்? என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒருவேளை இல்லமால் இருக்கலாம். பூமி என்பது பல பில்லியன் புள்ளிகளில் ஒரு சிறிய புள்ளி. அவ்வாறிருக்க இந்த அல்லது வேறு எந்த வான மண்டலத்திலும் நாம் மட்டுமே ஜீவராசி என்று எப்படி இருக்கமுடியும்?

சரி, மிகச் சரியான சூழல் பராமரிக்கப்படும் பூமிக்கு வெளியே இருக்கும் உயிர்கள் பற்றி நமக்கு தெரிந்தது என்ன?

வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) இருப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் இருப்பதாக முடிவு செய்ய வேண்டும் என நிபுணர்கள் பலர் சொல்கின்றனர். சுமார் 200 பில்லியன் விண்மீன் மண்டலங்களில் ஒன்றான நமது பால்வழி மண்டலம் சுமார் 300 பில்லியன் நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது. நமது சூரியன் பூமியில் உயிர்களின் முதன்மை ஆதாரம் ஆகும்.

By admin