• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

வைபவ் சூர்யவன்ஷி பற்றி விவாதிக்கப்படும் வேளையில் ஆர்ச்சரின் பழைய பேட்டி வைரலாவது ஏன்?

Byadmin

Jul 10, 2026


வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி மூன்று போட்டிகளில் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டி-20 போட்டித்தொடரில் கேப்டன் பதவியைப் பெற்றார்.

அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது.

அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காத போது, அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று இந்தியாவில் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதம் நடந்தது.

பிரிட்டனுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வைபவ் தனது வாய்ப்பைப் பெற்றார். சர்வதேச அளவில் அவர் அறிமுகமான இப்போட்டியில் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாவது போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வைபவ் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

By admin