• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

ஷார்க் பீச்: கடலில் விளையாடும்போது சுறா தாக்கிய சிறுவனை நண்பர்கள் துணிச்சலாகக் காப்பாற்றியது எப்படி?

Byadmin

Jan 21, 2026




வெப்பமான, ஆழமற்ற நீரில் காணப்படும் ஆக்ரோஷமான மீன் புல் சுறா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெப்பமான, ஆழமற்ற நீரில் காணப்படும் ஆக்ரோஷமான மீன் புல் சுறா (கோப்புப்படம்)

சிட்னியில் சமீபத்தில் மூன்று சுறா தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதில் குறைந்தது இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை மாலை மேன்லி கடற்கரையில் காயம் அடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டி ஒய் கடற்கரையில் 11 வயது சிறுவன் ஒருவரின் அலைச்சறுக்கு பலகையை சுறா கடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் அச்சிறுவன் பாதுகாப்பாக பாதுகாப்பாக வெளியேற வேண்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நீந்துபவர்கள் மற்றும் அலைச்சறுக்கு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளூர் சபை வலியுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் சிட்னி துறைமுகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது பெரிய சுறா தாக்கியதில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது முதல் சம்பவம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

By admin