• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

ஷீத்தல் தேவி: பிபிசியின் சிறந்த வளரும் வீராங்கனை விருது பெற்ற இவர் யார்?

Byadmin

Feb 19, 2025


iSWOTY ஷீத்தல் தேவி - பிபிசியின் சிறந்த வளரும் விளையாட்டு வீராங்கனை விருது பெற்றவர்

பிபிசியின் வளரும் வீராங்கனைக்கான விருது, மிக இளம் வயதில் பாராலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை என்ற புதிய மைல்கல்லை எட்டிய 18 வயதான ஷீத்தல் தேவிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர், “இந்த அங்கீகாரத்தை எனக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி, இந்த மேடையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்று கூறினார்

மூன்றே ஆண்டுகளில், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம், 2022 ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஷீத்தல் ஃபோகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை பாதிப்புடன் பிறந்தார். கைகள் இல்லாமல் விளையாடும் வெகு சில வில்வித்தை வீராங்கனைகளில் ஒருவராக அவர் உருவாகினார்.

By admin