• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

ஷேக் முஜிபுர் ரஹ்மான்: பாகிஸ்தான் ஆட்சியாளரை அகற்ற போராடிய முஜிபுர் ரஹ்மான் ந்தியா வந்த போது நேரு கூறியது என்ன?

Byadmin

Mar 9, 2025


ஷேக் முஜிபுர் ரஹ்மான், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜனவரி 1972 இல், ஷேக் முஜிபுர் வங்கதேச அதிபராக இந்தியா வந்தார்.

  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி இந்தி

1961 ஆம் ஆண்டு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கு எதிராக தனது அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்தினார்.

அவர் ‘ஸ்வாதின் பங்களா பிப்லவி பரிஷத்’ என்ற அமைப்பை நிறுவினார்.

1962 ஆம் ஆண்டு ராணுவச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, டாக்காவில் உள்ள பால்டன் மைதானத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது, அங்கு வங்காளிகள் மீதான அயூப் ஆட்சியின் அணுகுமுறையை கிழக்கு பாகிஸ்தான் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.

1962 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அயூப்பை அதிகாரத்திலிருந்து அகற்ற சில துணிச்சலான நடவடிக்கைகள் தேவைப்படும் என்று ஷேக் முஜிபுர் உறுதியாக நம்பினார்.

By admin