• Tue. Mar 4th, 2025

24×7 Live News

Apdin News

ஷேக் ஹசீனாவை அகற்ற உருவான மாணவ இயக்கத்தின் புதிய கட்சி – அவர்கள் கோரும் ‘இரண்டாவது குடியரசு’ என்றால் என்ன?

Byadmin

Mar 4, 2025


மாணவர் தலைவர் நஹித் இஸ்லாம் இரண்டாம்(புதிய) குடியரசு குறித்து தனது உரையில் அடிக்கடி குறிப்பிட்டார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர் தலைவர் நஹித் இஸ்லாம் இரண்டாம் குடியரசு குறித்து தனது உரையில் அடிக்கடி குறிப்பிட்டார்

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்திய மாணவர்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) என பெயரிடப்பட்ட இந்த புதிய கட்சி குறித்த அறிவிப்பு, நாட்டின் அரசியலில் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த கட்சியால் எந்த தொலைநோக்கு திட்டத்தையோ அல்லது செயல்திட்டத்தையோ முன்வைக்க முடியவில்லை என பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மறுபக்கம், தேர்தல் மூலம் அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி அதன் பின் நாட்டிற்கு புதிய அரசமைப்பு சட்டத்தை இயற்றுவது, இரண்டாவது குடியரசு குறித்த பேச்சு மற்றும் கட்சியின் “இன்குலாப் ஜிந்தாபாத்,” என்ற முழக்கம் போன்றவை அந்த கட்சி எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறது என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

தாங்கள் முன்வைத்துள்ள இலக்குகள், வங்கதேசத்தின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் என்ற செய்தியை அளிப்பதாக கட்சியின் மூத்த இணை ஒருங்கிணைப்பாளர் ஆரிஃபுல் இஸ்லாம் ஆபித் பிபிசி வங்காள சேவையிடம் தெரிவித்தார்.

By admin