• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் கேட்பதால் இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?

Byadmin

Nov 19, 2025


ஷேக் ஹசினா

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார்.

இந்த ஓராண்டில் வங்கதேசத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பது இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவையும் சிக்கலாக்கியிருக்கிறது.

நவம்பர் 17-ஆம் தேதி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த முடிவுக்கு முன் பிபிசிக்கு கொடுத்த நேர்காணலில் பேசியிருந்த ஷேக் ஹசீனா, “இந்த விசாரணை ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒரு திசையில் தான் செல்கிறது என்று நான் நினைக்கிறேன். இது, என் அரசியல் எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு ‘கங்காரு நீதிமன்றம்’ (மக்களைத் தவறாகத் தண்டிக்கும் சட்டவிரோத நீதிமன்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்) நடத்தும் நாடகம்” என்றார்.

“எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். ஆயுதமற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த நானோ வேறு எந்த அரசியல் தலைவருமோ உத்தரவு வழங்கவில்லை” என்றும் அவர் கூறினார்.

By admin