• Mon. Mar 17th, 2025

24×7 Live News

Apdin News

ஷேக் ஹசீனா குறித்து இந்தியா என்ன நினைக்கிறது? எவ்வளவு தூரம் ஆதரவு கிடைக்கும்?

Byadmin

Mar 17, 2025


வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தப் படம் ஜூன் 22, 2024 அன்று, அப்போதைய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் சந்தித்தப்போது எடுக்கப்பட்டது

  • எழுதியவர், சுப்ஜோதி கோஷ்
  • பதவி, பிபிசி வங்க மொழி சேவை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானம் டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இது அவரது பயணத்தில் ஒரு ‘இடை நிறுத்தம்’, அதாவது அதிகபட்சம் ஆறு முதல் ஏழு மணி நேரம் மட்டுமே இங்கே தங்குவார் என்று இந்தியா முதலில் எண்ணியது.

ஆனால், விரைவிலேயே இந்தியாவின் இந்த தவறான கணிப்பு குறித்து தெளிவு கிடைத்தது.

ஏழு மாதத்துக்கு மேலாக அவர் இன்னும் இந்தியாவில் ஒரு அரசு விருந்தினராகவே தங்கியுள்ளார்.

பெரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் இங்கு இவ்வளவு காலம் தங்கியிருந்தாலும், ஷேக் ஹசீனாவின் விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய விரும்புகிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.

By admin