• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

ஷோலே: ஆரம்பத்தில் ஓடாத படம் பிறகு 3 ஆண்டு ஓடி சாதனை படைத்த கதையின் ரகசியம் என்ன?

Byadmin

Aug 15, 2025


ஷோலே, பாலிவுட், திரைப்படங்கள், சலீம் கான் - ஜாவேத் அக்தர், அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார்,

பட மூலாதாரம், Sippy Films

இந்தியாவின் மிக பிரம்மாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றான ‘ஷோலே’ வெளியாகி ஐம்பதாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தத் திரைப்படம் ஏன் இந்தியாவின் மகத்தான படங்களில் ஒன்றாக இருக்கிறது?

இந்தியாவில் வெளியான திரைப்படங்களிலேயே மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றான ‘ஷோலே’-வுக்கு பிறகு இந்தியாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும்கூட, இந்தப் படம் ஏற்படுத்திய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ஹேமமாலினி, ஜெயாபாதுரி, அம்ஜத்கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தின் கதையை சலீம் கான் – ஜாவேத் அக்தர் ஜோடி இணைந்து உருவாக்க, ரமேஷ் சிப்பி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தி சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.டி. பர்மன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

By admin