• Tue. Oct 14th, 2025

24×7 Live News

Apdin News

ஹயர்: அமெரிக்காவில் வந்துள்ள புதிய மசோதாவால் இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு என்ன பிரச்னை?

Byadmin

Oct 14, 2025


அமெரிக்கா இல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்களால் பிழைக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

“நான் விரைவாக மீதமிருக்கும் ரூ.15 லட்சம் வீட்டுக் கடனை அடைத்துவிட்டு, கார் வாங்குவதை தள்ளி வைக்க வேண்டிய சூழலில் உள்ளேன்,” என்கிறார் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மென் பொறியாளரான கோகுல் நாத்.

அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை ஐடி துறையும் எதிர்கொண்டு வருகிது.

சமீபத்தில் ஹெச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகளால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இந்திய ஐடி துறை, அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள ‘ஹயர்’ மசோதாவின் வடிவில் புதிய அச்சுறுத்தல்களைச் சந்திக்க உள்ளது. அமெரிக்க செனட்டில் ஹால்டிங் இண்டர்நேஷனல் ரிலொகேஷன் ஆஃப் எம்ப்ளாய்மெண்ட் (ஹயர் – HIRE) மசோதா கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மசோதா என்ன சொல்கிறது?

அமெரிக்காவுக்கு வெளியே வேலைவாய்ப்புகளை அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விலக்கு பெறுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது.



By admin