• Tue. Nov 25th, 2025

24×7 Live News

Apdin News

ஹர்ஷவர்த்தனா: வடக்கே பேரரசை எழுப்பிய இவர் தெற்கே விரிவடைவதை புலிகேசி தடுத்தது எப்படி?

Byadmin

Nov 25, 2025


பேரரசர் ஹர்ஷவர்த்தனா

பட மூலாதாரம், NCERT

படக்குறிப்பு, ஹர்ஷவர்த்தனா, கி.பி. 606 முதல் 647 வரை ஆட்சி செய்தார்.

குப்த பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சிறிய, சிறிய ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்த வட இந்தியாவை ஒருங்கிணைக்கும் முக்கியமான பணியை ஹர்ஷவர்த்தனா செய்தார் என்று கூறப்படுகிறது.

அரசர்கள் பெரும் வெற்றியாளராக மட்டுமல்லாமல் வெற்றிகரமான நிர்வாகி, இலக்கியவாதி போன்ற குணங்களுடன் இருப்பது அரிதாகவே காணப்படுகின்றன.

கி.பி. 590 இல் பிறந்த ஹர்ஷவர்த்தனாவின் வாழ்க்கை வரலாறான ‘ஹர்ஷசரிதத்தில்’ பானபட்டா பின்வருமாறு எழுதுகிறார்: “தொடர்ந்து ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் அவரது கைகள் கருமையடைந்து விட்டன; அது, அனைத்து அரசர்களின் மகிமை என்ற நெருப்பைத் தணிப்பதில் அழுக்கடைந்ததைப் போல இருந்தது.”

16 வயதில் தானேஸ்வர் அரியணையில் அமர்ந்தபோது, ஹர்ஷர் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டார், ஆனால் அவர் இந்தக் கஷ்டங்களைக் கண்டு அஞ்சாமல் தனது பாதையை அமைத்துக் கொண்டார்.

விஜய் நஹர் தனது ‘ஷீலாதித்ய பேரரசர் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது யுகம்’ என்கிற புத்தகத்தில், “தனது தந்தை பிரபாகரவர்த்தனின் மரணம், தாய் உடன்கட்டை ஏறியது, மூத்த சகோதரர் ராஜ்யவர்த்தன் சதியால் மரணம், மைத்துனர் மௌகரி மன்னன் கிரகவர்மாவின் கொலை, மற்றும் சகோதரி ராஜ்யஸ்ரீ ராஜ்ஜியத்தை விட்டு விந்திய மலையின் காடுகளுக்குப் பயணம் போனது போன்ற பல பயங்கரமான மற்றும் கடுமையான நிகழ்வுகள் ஹர்ஷரின் வாழ்க்கையில் நடந்தன. ஆனால் இளம் வயது மற்றும் அனுபவமின்மையைக் கடந்தும் அவர் இவற்றைத் தைரியமாக எதிர்கொண்டார்.” என எழுதியுள்ளார்.

By admin