• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

ஹெஸ்பொலா, ஹூத்தி, ஷியா: இரானின் மூன்று பெரிய கூட்டாளிகளும் இப்போது எந்த நிலைமையில் உள்ளன?

Byadmin

Mar 5, 2026


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் போராட்டங்கள் வெடித்தன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் போராட்டங்கள் வெடித்தன.

கடந்த பல தசாப்தங்களாக, இரான் தனது பாதுகாப்பு உத்தியை ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்நாட்டுத் திறன்களுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பிராந்தியத்தில் தனது செல்வாக்குடன் இணைக்க முயற்சி செய்துள்ளது.

இந்த உத்தியின் கீழ், இரான் லெபனான், இராக், சிரியா மற்றும் ஏமனில் ஆயுதம் ஏந்திய அரசு சாரா குழுக்களின் வலையமைப்பில் முதலீடு செய்துள்ளது.

இரான் நாட்டின் இந்த உத்தி முற்றிலும் பாரம்பரியப் போரையோ அல்லது நிரந்தர அமைதியையோ அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த உத்தி அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் தெளிவற்ற தாக்குதல்களிளை அடிப்படையாகக் கொண்டது, இது எதிரியை பரபரப்பாக வைத்திருக்கும், ஆனால் மறுபுறம் இரானை எந்த உலகளாவிய சக்தியுடனும் பெரிய அளவிலான மோதலுக்கு இட்டுச் செல்லாது.

இருப்பினும், 7 அக்டோபர் 2023 முதல், இஸ்ரேல் இந்த இரான் வலையமைப்பில் உள்ள பல்வேறு கூறுகளை இலக்கு வைத்துள்ளது.

ஆரம்பத்தில் இஸ்ரேல் தரப்பிலிருந்து இரான் தொடர்புடைய குழுக்கள் இலக்கு வைக்கப்பட்டன. பின்னர் பிராந்தியத்தில் உள்ள இரான் தளங்கள் மற்றும் இரான் நாட்டின் உள்ளே கூட தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

By admin