• Tue. Nov 18th, 2025

24×7 Live News

Apdin News

12,000 ஆண்டுகள் பழைய சிற்பம் : நமது மூதாதையர்கள் சொல்வது என்ன?

Byadmin

Nov 18, 2025


12,000 ஆண்டுகள் பழமையான  சிற்பம் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Ministry of Culture and Tourism of Türkiye

படக்குறிப்பு, காராஹான்டெப்பே தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிற்பம் கூர்மையான முக அம்சங்கள், ஒரு சிறிய மூக்கு மற்றும் குழிந்த கண்களைக் காட்டுகிறது.

ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பு, நமது மூதாதையர்கள் தங்களைப் பற்றி நினைத்த விதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள சான்லியுர்ஃபாவில் (Sanliurfa) உள்ள ஒரு பழமையான தளமான காராஹான்டெப்பேயில் (Karahantepe) மனித முகம் செதுக்கப்பட்ட ‘T’ வடிவத் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் உழைப்பு குறைவான வாழ்க்கை முறையை (sedentary lifestyle) பின்பற்றத் தொடங்கிய ஆரம்பகாலக் குடியிருப்புகளில் காராஹான்டெப்பே ஒன்றாகும்.

எழுத்துத் தோன்றுவதற்கு முன், கால்நடை வளர்ப்பு (animal husbandry) அப்போதுதான் உருவாகி வந்த நியோலித்திக் (Neolithic – புதிய கற்காலம்) காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மனித முகத்தின் உருவாக்கம், ஆரம்பகால மனித சமூகங்களில் காணப்பட்ட குறியீட்டுச் சிந்தனை மற்றும் அருவமான கருத்துகள் (abstract concepts) பற்றிய முக்கியமான துப்புகளை வழங்குகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“கலைத்தன்மை வாய்ந்த நுணுக்கம்”

“இதுவரை, நாங்கள் தோண்டியெடுத்த கற்கள் மனிதர்களைக் குறிக்கின்றன என்று நம்பினோம், ஆனால் உண்மையான முகத்தின் சித்தரிப்பை நாங்கள் கண்டறிந்தது இதுவே முதல் முறை. இது நம்பமுடியாத உற்சாகமான தருணம்,” என இந்த அகழ்வாராய்ச்சிக்குத் தலைமை தாங்கியவரும், கண்டுபிடிப்பின் போது தளத்தில் இருந்தவருமான பேராசிரியர் நெக்மி கருல் கூறினார்.

By admin