• Fri. Nov 28th, 2025

24×7 Live News

Apdin News

’16 ஆண்டுகள் கடந்தும் வலி தீரவில்லை’ – சென்னை உயர்நீதிமன்ற போலீஸ், வழக்கறிஞர் மோதலில் நடந்தது என்ன?

Byadmin

Nov 28, 2025


வழக்கறிஞர் Vs போலீஸ்

“எனது இரண்டு கால்களிலும் காவலர்கள் கடுமையாக அடித்தனர். என்னால் சரியாக எழுந்து நிற்க முடியவில்லை. திடீரென பெரிய கல் ஒன்று என் முதுகின் மீது வந்து விழுந்தது. வாந்தி எடுத்தவாறு அங்கேயே மயங்கி விழுந்தேன்” எனக் கூறுகிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.

கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் – வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது தனக்கு ஏற்பட்ட துயரத்தை இவ்வாறாக அவர் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து வியாழக்கிழமையன்று (நவம்பர் 27) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ‘தாக்குதலின் பின்னணியில் இயங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை – வழக்கறிஞர்கள் மோதல் ஏற்பட்டது ஏன்?

இலங்கையில் 2009ஆம் ஆண்டு அந்நாட்டு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

By admin