• Mon. Apr 27th, 2026

24×7 Live News

Apdin News

’16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி’ – செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

Byadmin

Apr 27, 2026


'16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி' - செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், HANDOUT

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“அரிசி ஆலையில் வேலை எனக் கூறி கூட்டிச் சென்றனர். அங்கு வேலை பார்த்த நான்கு வருட காலத்தில் சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமைகளை அனுபவித்தோம். அங்கிருந்து உயிருடன் வெளியில் வந்ததே பெரிய விஷயம்” என்கிறார், செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடி கிராமத்தில் வசிக்கும் சுமதி.

இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமதி உள்பட ஒன்பது பேரை அரிசி ஆலையில் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தி துன்புறுத்தியதாக ஆலை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 16ஆம் தேதியன்று அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் அவரின் கார் ஓட்டுநருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனையை செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் தாலுகாவில் வடகடம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீராசாமி என்பவர் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இங்கு பணிபுரிவதற்கு நான்கு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது இருளர் பழங்குடிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். கணேசன், மாரி, காமாட்சி, அஞ்சலை, குமார், சாந்தி, மகேஸ்வரி, சுமதி, ஏழுமலை உள்ளிட்ட ஒன்பது பேரும் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

By admin