• Sat. Dec 27th, 2025

24×7 Live News

Apdin News

17 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான்: அந்நாட்டு ஊடகங்களின் கருத்து என்ன?

Byadmin

Dec 27, 2025


தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், @bdbnp78

படக்குறிப்பு, டாக்கா வந்தடைந்த பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தாரிக் ரஹ்மான்

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கை தேர்தலிலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரஹ்மான் மீண்டும் டாக்கா திரும்புவதும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தாரிக் ரஹ்மானின் தாயாரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதோடு, நாட்டிற்குள் பல விஷயங்கள் கட்டுப்பாடற்று இருக்கும் ஒரு சூழலில் அவர் வங்கதேசம் திரும்பியுள்ளார்.

தாரிக் ரஹ்மானின் வருகைக்கு வங்கதேச ஊடகங்களில் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் ஆங்கில நாளிதழான ‘ப்ரோதோம் ஆலோ’ தனது கருத்துக் கட்டுரை பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது, அதன் தலைப்பு: ‘தாரிக் ரஹ்மானின் வருகை ஏன் முக்கியமானது?’

ப்ரோதோம் ஆலோ எழுதியுள்ளதாவது: “உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில்தான் அவர் திரும்புவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. 1975-க்குப் பிறகு நாடு மிக நெருக்கடியான நிலையில் இருக்கும் சூழலில் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்புகிறார். தாரிக் முன் மிகப்பெரிய மற்றும் கடினமான சவால்கள் உள்ளன. தேர்தல் சமயத்தில் பிஎன்பி கட்சியின் உண்மையான தலைவராகவும், ஒருவேளை அவர் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானால் அதற்கு மேலதிகமான சவால்களையும் அவர் சந்திக்க வேண்டியிருக்கும்.”

ப்ரோதோம் ஆலோ-வின் இந்த கட்டுரையில் வங்கதேச அரசியல் ஆய்வாளர் ஸாஹித்-உர் ரஹ்மான் எழுதியதாவது: “ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சி மற்றும் அவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற பிறகு, அவாமி லீக்கிற்கான ஆதரவு ஒரே இரவில் முடிந்துவிடவில்லை என்பது உண்மைதான். இருப்பினும், தற்போதைக்கு அவாமி லீக் மீண்டு வருவது எளிதாகத் தெரியவில்லை.”

By admin