12
இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வசித்த குடும்பத்தில், 18 நாள் வயதுடைய பெண் குழந்தை மரணமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில், குழந்தையின் தாயார் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த தினம் அதிகாலை நேரத்தில் அவசர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் குழந்தையின் தந்தை வீட்டில் இருந்ததாகவும், பின்னர் குழந்தை கீழே விழுந்ததாக தகவல் அளிக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கியுள்ளார்.
சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வீடு முழுவதும் விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தாய் வீட்டுக்குள் இருந்த நிலையில் காவலில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஜூன் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.