நேற்று இரவு மொத்த உலகத்திற்கும் பரபரப்பான இரவாக அமைந்தது. “இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தால் ஈரான் மீதான பாரிய தாக்குதல் குறித்த அச்சம் நிலவியது.
ஈரான் பொதுமக்கள் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது கட்டமைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என இஸ்ரேலும், அமெரிக்காவும் விடுத்த எச்சரிக்கை தாக்குதல் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்தது.
ஆனால் சுவாரஸ்யமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்கும் நிபந்தனையுடன் ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடுவை 2 வாரங்கள் நீட்டிப்பதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, இரண்டு வாரங்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த அமெரிக்காவுடனான 2 வார போர் நிறுத்தத்திற்கும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரான் 10 நிபந்தனைகளுடன் சம்மதித்துள்ளது.